Friday, March 11, 2011

Payanam :)

Based on repeated request from the followers, here is the review of payanam in tamizh.:) courtesy again.. Miss.Aishwarya Govindarajan

ராதாமோகனின் "அழகிய தீயே!" பார்த்த பொழுது "ஆஹா!படம் அழகாக இருக்கிறது!" என்று உணர்ந்தேன்(அப்படம் தெலுங்கில் உள்ளது என்று அப்பொழுது எனக்குத் தெரிந்திருக்கவில்லை)."பொன்னியின் செல்வன்",பெயர் என்னை ஈர்த்த பொழுதும் படம் என்னை ஏதும் ஈர்க்கவில்லை."மொழி",இசையும் மௌனமும், உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளிலும், பாடல் வரிகளிலும் எனப் பலதை உணரவைத்து ஒரு பரிபூரணம் போல் எனக்குத் தோன்றியது."அபியும் நானும்",பத்து மாதங்கள் தாய் சுமந்தாலும்,தந்தை என்பவன் தன் வாழ்வின் எல்லைவரை தன்னுள் தன் மகளை தன் தாயாகவே சுமக்கிறான் என்ற உண்மையை அழகாகச் செதுக்கிக் கூறிய படம்.அவ்வரிசையில் இதோ "பயணம்",கார்கியின் அர்த்தம் மிகப்பொதிந்த பாடல் வரிகளில் துவங்குகிறது படத்தின் பயணம்.காட்சிகளுக்கு காட்சி வசனங்கள் அருமை என்று கூறுவதை விட வசனங்களே இப்பயணத்திற்கு பலம் எனலாம்.உதாரணங்கள்: குழந்தையும் தீவிரவாதிக்கும் இடையேயான உரையாடல்,நாகர்ஜுனாவிர்க்கும் பிரகாஷ்ராஜிருக்கும் இடையேயான தீவிரவாதியை விடுவிப்பது பற்றியான உரையாடல்.வேலை தேடுபவனுக்கும் ஜோசியக்காரனுக்கும் இடையேயான நகைச்சுவையூடே சிந்திக்கத்தூண்டும் உரையாடல்,ஹீரோவிற்கும் அவனை அனைத்துமாக நம்பும் ரசிகனுக்கும் இடையேயான உரையாடல் என ஒவ்வொரு பகுதியும் ஏதோ ஒரு விதத்தில் நறுக்கென்று சொல்லவந்ததை மனதில் தைக்கிறது.குழந்தையிலிருந்து பாதிரியார் வரை ஒவ்வொரு முக்கிய பாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கிறது.பாஸ்கரின் பாத்திரமும்,பிரகாஷ்ராஜ் பாத்திரமும், இளங்கோ குமாரவேலின் பாத்திரமும் பற்றி பலவே பேசலாம் ஆனால் பேசினால் படத்தின் முழுக்கதையையும் விவாதிக்கும்படி ஆகிவிடும்.இதை ஒரு தீவிரவாதம் பற்றிய படம் என்று பார்க்காமல்,மனித மனத்தின் ஆழத்தை படிக்கும் படம் என்ற ரீதியில் அணுகலாம்.ஒவ்வொரு மனிதமும் தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் முதலில் தன் பார்வையிலிருந்தே பார்க்கிறது பிறகுதான் அது சுற்றம்/மற்றவர் எனும் பார்வையிலிருந்து பார்க்கிறது,தான் செய்வது தவறு என்று உணராதவன் பிறர் செய்யக் கண்டதும் அவன் கண்களை அது உறுத்துவது,உயர் அதிகாரியில் தொடங்கி இதற்கு ஒரு தீவிரவாதி என்பவன் கூட விதிவிலக்கல்ல அவனும் அவ்விடத்தில் மனிதனே என்பதையும் காண்பிக்கிறது படம்,அதை திரையில் சொன்ன விதம் நன்று.சாதாரண விஜயகாந்த் படத்தில் ஹீரோவை நியாயமாகக் காட்டி பக்கம் பக்கமாக வசனங்கள் பேசவைத்து நம் காதுகளை கிழிப்பது போல் அல்லாமல்,வசனங்கள் முன்பு சொன்னது போல் நறுக்கென்று சென்று மனதின் ஆழத்தைக் கிழிக்கிறது பல இடங்களில்,ராதாமோகனுக்கு இதற்கு ஒரு சலாம்.பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் ஒரு மௌனத்தை "மொழி" வாயிலாகப் பேசியது எனில்.சைலன்ட் மூவீஸ் வழியாக வார்த்தைகளால் பேசி நம்மை மௌனிக்க வைக்கிறது .இவர்களின் வெற்றிக் கூட்டணித் தொடர வாழ்த்துக்கள்.இவ்வளவு இருந்தும் நாகர்ஜுனா முதலில் தோன்றும் காட்சியையும் இறுதிக்காட்சியையும் ஸ்லொவ் மோஷனில் காண்பித்து திடீரென்று படத்தை ஒரு சாதாரண ஒன் மேன் சப்ஜக்ட் போல் காண்பித்துவிட்டார் ராதாமோகன்.நாகர்ஜுனா மாஸ் ஹீரோ என்பதால் தனக்கு ஹைப் தேவை என்று கேட்டிருப்பாரோ?,தெரியவில்லை.இயக்குனரே மிக அழகாய் செதுக்கி இருக்க எடிட்டிங் பணி சிறிதுதான் தேவைபட்டிருக்கும் என நினைக்கிறேன்.மொத்தத்தில் பயணம்- ஓட்டுனர் ஒரு சில இடங்களில் திடீரென்று சிறிதே நிலை தடுமாறியதைத் தவிர்த்து இது ஒரு நல்ல அனுபவம் தரும் பயணம்,பயணித்த/பயணிக்கும் அனைவருக்கும்.

Tuesday, March 8, 2011

நடுநிசி நாய்கள்-ஒரு பொதுப் பார்வையில்

               
                 ஒரு திரைப்படமாய் ஏனோ மனதைச் சென்றடையவில்லை.அருமை என்றும் கூற இயலாது,மாறாய் ஒரு புதுமுயற்சி,மேனனிடமிருந்து,வரவேற்கலாம்.படம் படுமோசம் காட்சிகள் எல்லைமீறியதாய் இருப்பதாய் கூறுபவர்களுக்கு,அவ்வாறெனில் முதலில் நீங்கள் பெரும்பாலான ஹாலிவுட் படங்களைப் பார்த்து அருமை என்று சொல்வதை தவிர்க்க வேண்டும்.இரண்டாவது,செல்வராகவன் போன்றவர்களின் படங்களில் உணர்ச்சிகள் மிக்கது என்ற போர்வையில் காண்பிக்கப்படும் காட்சிகளைப் பார்த்து ஆஹா ஒஹோ என்றும் என்னை பாதித்தது என்றும் கூறி சோகம் கொண்டு கனத்த மனதுடன் செல்பவர்கள் அதையே சமூகம் என்ற பார்வையில் கூறியதும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்,புரியவில்லை(அதற்காக செல்வராகவன் படங்களை குறை கூறவில்லை).மூன்றாவது,எண்ணம் எப்படியோ?! உலகும் அப்படியே,இதை நான் கூறவில்லை,ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு மிருகம் உண்டு என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை.ஆனால்,கெளதம் மேனனும்,சமூகத்திடையே ஆழமாகப் பதிக்கப்படவேண்டிய கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.அதை அவர் ஒழுங்காய் சொல்லத் தவறியதாய் தோன்றுகிறது.த்ரில்லர் என்று பெயரிட்டுவிட்டதாலும் பார்ப்பவர்களுக்கு அதில் வரும் துப்பாக்கியும் பைத்தியத்தனமும்,ரத்தமும் சதையும்தான் பிரதானமாகத் தெரியுமே தவிர(இதுவும் ஒரு மனித இயல்பே),அவர்களைப் போய் சேரவேண்டிய செய்தி அதிலே மறைக்கப்பட்டுவிடுகிறது.ஆனால்,சைக்கோ த்ரில்லர் படமாய் துவக்கி நேஷனல் ஜியாக்ரபிக் டாகுமெண்டரி போல் முடித்துவிட்டார் (அந்த டாக்டரைப் பார்த்தால் கூட டிஸ்கவரியில் வரும் அறிவியல் வல்லுநர் போல்தான் இருக்கிறார்).ஹீரோ சப்ஜக்ட் என்று தொடங்கி போலீசை இறுதியில் வரவழைத்து முடிக்கும் படங்களைப் போல.கௌதம் இது சமுகத்திற்கு செய்தி சொல்வதற்காய் எடுத்தபடமா? அவ்வாறெனில் திரையை பார்க்க இயலாது அக்கம் பக்கம் திரும்பி நெளியவைக்கும் காட்சிகள் சிலதை தவிர்த்திருக்கலாம்.த்ரில்லர் என்பதாயின் கடைசியில் அந்த நீண்ட விளக்கம் தேவையில்லை என்பது போல் தோன்றுகிறது.அதனால் இறுதியில் இது எந்த வகை சார்ந்த படம் என்று சிறிது நேரம் குழப்பம் நிலவுகிறது.படத்தில் இசையற்று இருப்பது போன்ற உணர்வு ஏனோ தோன்றவில்லை,இரவு நேரங்களில் இயற்கையாய் தோன்றும் சத்தங்களை உபயோகப்படுத்தி இருப்பது காரணமாக இருக்கலாம்.சிறிது நேரமே வந்தாலும் தன் பார்வையிலும் தன் ஒரு சிரிப்பிலேயுமே தன்னைப் பற்றி கூறிவிடும் நோயாளியாக சமந்தா,பாராட்டுக்கள்.வீரா,இனிமேல் த்ரில்லர் படங்களுக்கு தமிழ் திரையுலகம் இவரை நிரந்தரமாக நியமித்துவிடாதிருந்தால் சரி.முதல் படமாயினும் சைக்கோவாக நன்றாகவே தன்னை காண்பித்திருக்கிறார்,சமீராவிடம் புல்வெளியில் அமர்ந்து பேசுகையில் வீராவாக அந்த முகத்தில் நிலவும் அமைதியும் சட்டென்று சமராக மாறுகையில் அதே முகத்தில் தானாகத் தோன்றும் ஆத்திரமும் கோபமும் என இவர் நடிப்பு நன்று.உடல் எரிந்த நிலையில்,அதாவது சமரின் கற்பனை மீனாக்ஷி, ஏனோ அவருக்கு அந்த பாத்திரம் ஒத்துவராதது போல் தோன்றுகிறது.முன்பே குறிப்பிட்டது போல,படத்தில் வரும் சைக்கோத்தனமும் காட்சிகளும்தான் பார்த்தவர்களுக்குப் பிரதானமாய்த் தெரிந்ததே தவிர,மன உளைச்சல்களும் மன அழுத்தமும் மன ரீதியான இன்னபிற பாதிப்புகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லலாம் என்ற உண்மையை,பார்த்து படத்தை வெறுத்துவிட்டு சென்றவர்கள் உணரவில்லை என்றுதான் கூறவேண்டும்.உணரவில்லை எனில் மனம் இன்னும் வளரவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ளவும் முடியும்.

Sunday, March 6, 2011

Payanam


To every citizen in this state cinema is not just motion picture, we take movies seriously. It is not just a pass time. I do not say this because of the inextricable link between state politics and tamil cinema, it is more because of the unending list of people who still queue up outside studios in kodambakkam, seeking Vadapalani Murugan's help for reaching stardom! Well, criticism plays a vital role in taking our movies to the next level. Reviewers have always played an important role in deciding a movie's fate in the silver screen. Be it Vikatan or Hindu the first thing that we do after coffee on friday morning is read the week's movie reviews! Here is a sincere attempt to review new movies and bring back to life the old ones!!

The first review in Cinemapatti! Here it goes!

We wanted to start off this blog with a good movie. I was just thinking about some of the good movies that we saw in recent times and there I zeroed in on PAYANAM.

A Silent movies production, Prakash Raj - Nagarjuna starrer, directed by Radha Mohan- This is the resume of the movie. Enough brand names in it. Well, the plot is simple and straight. A flight carrying ordinary passengers enters into an extraordinary situation - HIJACK. It is always interesting to see how ordinary men would react to such extraordinary circumstance. The govt of India as usual sends in a committee of IAS officers and a NSG commando. What continues is the clash between the bureaucracy's 'keep talking' strategy and the commando's 'operation' strategy. Due to unexpected turn of events the latter wins and no prizes for guessing who emerges the winner.

The plot sounds very simple. Execution is definitely immaculate. The director has clearly chalked out the characters of the ordinary people in the flight. Be it the 'dhanda sooru' subash - Dr Narayana Sastry duo, or the Shining star and his fan duo, or the Father, Doctor-Colnel-Sandhya, every track has been clearly etched out for the audience to actually connect with them. The successful connect is the reason behind the success of the movie. The positives of the movie include- the detailed character sketch of every passenger. Lack of songs definitely helped making the movie gripping. Dialogues- Man! that was so well written. Perfect editing and cinematography, clear delivery of the message. What more do you expect out of 2 and half hours! Coming to the negatives, I would prefer calling it the not-so-positive side, there are a few. The hijack did seem pretty crude. If Nagarjuna the NSG commando was not the hero, I do not think NSG commandos will be allowed to scream at IAS officers like he does in the movie. The bomb diffusion scene in the end is quite unrealistic, rather cinematic. I mention this because rest to the movie sticks to the basics laws of reality. Some parts do go overboard. I would rate it at 3.5 on a scale of 5. Payanam- journey of change and with a change. A movie you can watch and enjoy with your family without any apprehension.

Do watch it in theatres! Its a movie that gives out message and entertainment!

Cheers!

The cinemapatti kuzhu will be back with another movie!